Wednesday, August 3, 2016

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் உற்சவத்தின் சப்பரத் திருவிழா!!(படங்கள்)


வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎எட்டாம்நாளானநேற்று(03.08.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு  மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து‪‎    கைலாச  வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில்   ஆறுமணியளவில் யாழ் நல்லூர் P.S. பாலமுருகன் குழுவினரும்  வவுனியா வீ.கரிகர புத்திரன் குழுவினரும் இணைந்து  வழங்கிய  விசேட தவில் நாதஸ்வர கச்சேரி  இடம்பெற்று  தொடர்ந்து  ஏழரை மணியளவில்   வசந்த மண்டபபூசை இடம்பெற்று       அகிலாண்டேஸ்வரி அம்பாள்‪‎ ஒன்பது மணியளவில் சப்பரத்தில்   எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
நேற்றைய சப்பரத்தின் பொது விசேட தவில் கச்சேரியில் தவில் மேதை  வீராசாமி தந்து புதல்வன் ஹரிகரபுத்திரனுடன் தவில் வாசித்ததுடன்  பாலமுருகன் தனது புதல்வனுடன்  நாதஸ்வர கச்சேரியில் கலந்து கொண்டதுடன்   வாண வேடிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
படங்கள் :கஜன் 






































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha