Sunday, January 14, 2018

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!(படங்கள்)


வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2 மணிக்கு சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
சிவன் முதியோர் இல்லம் மற்றும் கோவில் குளம் சிவன் ஆலய செயலாளர் ஆ.நவரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற  இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன..
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் க.உதயராசா, , சட்டத்தரணி க.தயாபரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன் ஆகியோரும்,சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் மாவட்ட முதியோர் சங்கத்தலைவர் வைத்தியர் க.இராமச்சந்திரன், ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன், வவுனியா இந்துக்கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம், தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் ஆகியோரும் கலந்து  கொண்டனர் .
மேற்படி பொங்கல் விழாவில்   வணக்கம்  வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைகளத்தின் உத்தியோகத்தர்  செல்லத்துரை ஸ்ரீநிவாசன் வரவேற்புரை  வழங்க   வவுனியா கோவில்குள அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவல்சபையின்  செயலாளர்  ஆறுமுகம்  நவரட்ணராஜா  அவர்களின்  தலைமையுரை இடம்பெற்றது.
தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர்  திருச்செல்வம் திரேஸ்குமார்  சட்டத்தரணி  தயாபரன் ஆகியோர் உரையாற்றினர்
நிகழ்வில் விசேட அம்சமாக தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இன்பமாக வாழ்வதற்கு பெரிதும் துணை நிற்பவர்கள் நட்புகளே …! உறவுகளே..! என்ற தலைப்பிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றது.

 மேற்படி  பட்டிமண்டப நிகழ்வில் எஸ்.எஸ்.வாஸன், சட்டதரணி தயாபரன்  , ஜெ.திருவரங்கன், ம.மதியழகன், திருமதி கி.கிசாலினி, திருமதி நந்தீஸ்வரி ஆகிய பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

















































































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha