Saturday, February 17, 2018

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2018




இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு  மகோற்சவ பெருவிழ
நிகழும் ஏவிளம்பி    வருடம் மாசி மாதம் 08ஆம்நாள்  (20.02.2018) செவ்வாய்க்கிழமை  பஞ்சமி  திதியும்  ரேவதி  நட்சத்திரமும் சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .
மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெறுகின்றது.
மேற்படி மகோற்சவத்தில்
23.02.2018    வெள்ளிகிழமையன்று  கற்பூர சட்டி திருவிழா
27.02.2018  செவ்வாய்கிழமையன்று  சப்பர திருவிழா
28.02.2018  புதன்கிழமையன்று  தேர்த்திருவிழா
29.02.2018 வியாழக்கிழமையன்று  தீர்த்த திருவிழா
30.02.2018  வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது . 
  


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha