Friday, March 31, 2017

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)



வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள் ஆரம்பமாகி நாற்குரவர்களான  திருஞானசம்பந்தர் திருநாவுகரசர் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் ஆகிய மூர்த்திகளும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  விசேட அபிசேகங்கள்  ஆராதனைகள் முதலியவற்றுடன் சண்டேஸ்வரர் பெருமானும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கும் விசேட கிரியைகள் நடை பெற்று   பன்னிரு திருமுறைகள ஓதப்பட்டு  நாற்குரவர்களுடன் சண்டேஸ்வரப் பெருமானும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் முருகப்பெருமான் விநாயகர் முதலானோர் உள்வீதி  வெளி வீதி வலம் வந்து சுப்ரமணியகோமம் கலைக்கப்பட்டு பகல் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
மீண்டும் மாலை நான்கரை மணிக்கு பபூஜைகள் ஆரம்பமாகி   மாலை ஏழு மணியளவில் சண்டேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலானோர் உள்வீதி வெளிவீதி வலம் வந்து மாலை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.































Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha