Tuesday, May 31, 2016

நயினை நாக­பூ­ஷ­ணிக்கு மகோற்­சவம் எதிர்­வரும் 6 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!!


சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம் எதிர்­வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
 
தொடர்ந்து பதி­னாறு தினங்கள் உற்­ச­வங்கள் ஆல­யத்தில் இடம் பெற­வுள்­ளது. 14 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை 108 சங்­குகளால் அம்­பா­ளுக்­கு பால் அபி­ஷே­கமும் 15 ஆம் திகதி புதன்­கி­ழமை பகல் சிவ­பூ­சை­யுடன் இரவு திரு­மஞ்­சமும் 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு பெரிய சப்ப­ரத்­தி­ரு­வி­ழாவும் மறு­தி­ன­மான 19 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தேர்­த்தி­ரு­வி­ழாவும் 20 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மை­ காலை தீர்த்தத் திரு­வி­ழாவும் 21 ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை மாலை தெற்­பத்­தி­ரு­வி­ழா­வுடன் ஆல­யத்­தி­னது உற்­ச­வங்கள் யாவும் நிறை­வ­டையும்.
 
ஆல­யத்­தி­ரு­வி­ழாவில் கலந்து கொள்­கின்ற அடியார்களி­னது தாக சாந்தி மற்றும் பசிப் பிணி ஆகி­ய­வற்­றினை தீர்ப்ப­தற்­கான ஏற்­பா­டு­களை ஆலயத்தின் மீது பற்­றுள்ள பல அடி­யார்­களும் அமுத சுரபி அன்ன­தான சபை­யி­னரும் ஒழுங்கு செய்து வரு­கின்­றனர். ஆல­யத்­தி­ரு­விழா காலங்­களில் நாட்­டி­னது பல இடங்­களில் இருந்தும் ஆல­யத்­திற்கு வரு­கின்ற அடியார் களி­னது போக்­கு­வ­ரத்து வச­திகள் யாழ்ப்­பாணம் மத்­திய பஸ் தரிப்பு இடத்தில் இருந்து குறி­காட்­டுவான் இறங்கு துறை வரைக்கும் இலங்கைப் போக்­கு­வ­ரத்து வட­பி­ராந்­திய சபையும் தனியார் சிற்­றூர்தி சங்­கத்தைச் சேர்ந்த சிற்­றூர்­தி­களும் அதிக அளவில் சேவையில் ஈடு­ப­டு­வ­தற்கும் முன்­வந்­துள்­ளனர்.
 
இதே­போன்று குறி­காட்­டுவான் இறங்கு துறைக்கும் நயி­னா­தீவு இறங்கு துறைக்குமிடையே சேவையில் ஈடு­ப­ட­வி­ருக்கும் மோட்டார் பட­கி­ன­து­ சே­வை­களும் ஆலயத் திரு­விழா காலங்­களில் வரு­கின்ற யாத்­தி­ரிகர்களி­னது வரு­கை­யினைத் தொடர்ந்து கட்­டுப்­பாடு இன்றி சேவை­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்­துள்­ளன. இதே­போன்று ஆல­யத்­தி­னது திரு­வி­ழா­வினை யொட்டி சென்­ற­வ­ரு­டங்­களைப் போல இவ்­வ­ரு­டமும் மின்­சார விநி­யோ­கத்­தினை வழங்­கு­வ­தற்கு இலங்கை மின்­சார சபை­யினர் சம்­மதம் தெரிவித்­துள்­ளதுடன் சுகா­தாரத் திணைக்­களத்­தி­னரும் ஆலய சுற்­றா­டலில் புனிதத்­தன்­மை­யினை பேணு­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வதற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். குடி தண்ணீர் சேவை­யினை வேலணை சாட்­டியில் இருந்து வேலணை பிர­தேச சபையின் ஊடாக தண்ணீர் பவு­சர்கள் மூல­மாக பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
 
ஆலயத்­தி­னது திரு­வி­ழாக்­கா­லங்­களில் ஆலயச் சுற்று சூழல் பகு­தி­களில் மது­பா­வனை மற்றும் புகைத்தல் மற்றும் பச்சை குத்­துதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­று­மு­ழு­தாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.பொலித்தீன் பாவ­னை­களை வர்த்­த­கர்­களும் ஆல­யத்­திற்கு சென்று வரு­கின்ற மக்­களும் பாவிப்­ப­தற்கு முற்­றாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு பதி­லாக கட­தாசி (பேப்பர்) யிலான அல்­லது ஓலை­யினால் செய்­ய­ப்பட்ட பைகளைப் பாவிக்கும் படியும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் நயி­னா­தீவு இறங்­கு­து­றை­மு­கத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை முகத்திற்கு இடையில் சேவையாற்றிவருகின்ற (பாரி) பாதை சேவையினை பழுதடையாத நிலையில் ஆலயத்தினது திருவிழா காலங்களில் இயங்குவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண அதிகார திணைக்களத்தினது பொறியியலாளரை பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha