Sunday, June 12, 2016

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)


வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இரவு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்று அலங்கரிக்கபட்ட  முத்து சப்பரத்தில்  ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர்  வீதியுலா வந்து பொங்கல் வைபவமும் இடம்பெற்றது .

9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இலங்கையின் முன்னணி இசைக் குழுவான சிவகுமாரின் அக்கினி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி HD மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.






























Saturday, June 11, 2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)


வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூன்று வருடங்களின் பின்   ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016)  காலை 10.30  மணியளவில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .














Friday, June 10, 2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016




வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூனர் வருடங்களின் பின் மீண்டும்  நாளை முதல்  ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30  மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி ஆலய மகோற்சவம்  நாளை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி
19.06.2016 -  ஞாயிற்றுகிழமை  தேர்த்திருவிழாவும்
20.06.2016   திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
21.06.2016  செவ்வாய்க்கிழமை  பூங்காவனமும் இடம்பெற்று
22.06.2016   புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.





Thursday, June 9, 2016

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : வவுனியா நெற் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!!



வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை (11.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள், மற்றும் இலங்கையின் முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் எம்.சிவகுமாரின் அக்னி இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை 4வது ஆண்டாக நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
காலை 9 மணிமுதல் இன் நேரடி ஒளிபரப்பினை உலகின் எப்பாகத்திலிருந்தும் வவுனியா நெற் இணையத்தளத்தில் கண்டுகளிக்க முடியும். இச் செய்தியை உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Tuesday, June 7, 2016

நயினை நாகபூசணி அம்பாளின் கொடியேற்ற முழுமையான படத்தொகுப்பு !!


உலகாளும் சக்தி நயினையுறை நாகபூஷணி அம்பிகையின் 
துர்முகி வருட மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் 
ஆரம்பம் ..நிகழ்வின் பதிவுகள் .காணக் கண்கோடி வேண்டும் ..ஓம் சக்தி ...பசிதீர்த்து அமுதளித்த அமுதசுரபியும் தாகம் தீர்த்தருளிய கோப்பிசபையினரும்







வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயம் பொங்கல் உற்சவம்(படங்கள் ,வீடியோ)


வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று 06.06.2016திங்கட்கிழமை இடம்பெற்றது.

வருடாந்தம் சிறப்பாக இடம்பெற்று வரும் பொங்கல் விழாவில் காலையில் இருந்தே பக்த அடியார்கள் கோவிலை நோக்கி சென்றிருந்ததுடன் பல பாகங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

இந் நிலையில் காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்திருந்ததுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் பொங்கல்பொங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை பண்டமெடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று ஆலயத்தின் விசேட பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.






















 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha